போராடுவார்கள் கைகளில் பதாகைகள்,போராட்டத்தை தணிப்பவர்கள் கைகளில் மொத்தமாக துப்பாக்கிகள்.பழைய காலத்து எண்ணாயிரம் சமணக் கழுவேற்றம் போல நேற்றைய முத்துநகர மனித நரவேட்டை நடத்தி முடிக்கப்பட்டது. பழைய காலத்தவர்கள் ,நாகரிகம் என்றோ,சட்ட ஒழுங்கு என்றோ கூக்குரலிடவில்லை.அவர்கள் கைகளில் பல் குழல் துப்பாக்கிகள் இல்லை,இவைதான்...
மேலதிக உடனடி கோரிக்கைகள்! தமிழக அரசே! படுகொலைகள் நிகழ்த்த துணைராணுவ படைகளை அழைக்காதே ! மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும், ஆட்சி தலைவரையும் இடம் மாற்றம் செய்து கண்துடைப்பு செய்யாதே! படுகொலை நடத்திய அணைத்து அதிகாரிகளையும் தற்காலிக பதவிநீக்கம் செய்து கொலைவழக்கு பதிவு...
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து திண்டுக்கல்லில் இடதுசாரிகளின் ஆர்பாட்டத்தில் #தமிழ்தேச_மக்கள்_முன்னணிமற்றும் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் தோழர்கள். Share
பாலன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி கடந்த 100 நாட்களாக அமைதியான வழியில் மக்களின் வாழ்வை, சுற்றுசூழலை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சமரசமற்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்து போராடி வந்தனர். ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை...
40 நிமிடம் நீடித்த போராட்டத்தில் 8 பெண்கள் உட்பட 22 தோழர்கள் கைது, சைதாப்பேட்டை காவல்நிலையம் அருகில் மண்டபத்தில் அடைப்பு. – தமிழ்த்தேச மக்கள் முன்னணி – இளந்தமிழகம். Share
மண்ணையும் மக்களையும் காக்கும் ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டத்தில் கார்பொரேட் அடிமை எடப்பாடி அரசால் படுகொலை செய்யப்பட்ட முத்துநகர் மாவீரர்களுக்கு வீரவணக்கம்! Share
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக, சட்டப்பூர்வமாக 100 நாட்கள் போராட்டம் நடந்தது. இன்று காலை மக்கள் முற்றுகை போராட்டம், பேரணி நடத்தினர், ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கும் முன்பே அந்த வளாகத்தின் உள்ளே தீப்பிடித்தது எப்படி ? ஆட்சியர் அலுவலகத்தின் வளாகம் நேற்றுமுதலே...
காலையில் கலெக்டர் ஆபிஸ் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை . அதில் மட்டும் 11 பேர் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது! 17 வயது மாணவி, தமிழரசன், சண்முகம் உள்ளிட்டோர் வீரச்சாவை அடைந்தனர். 74 வயதுடைய அருட்தந்தை டைசின் ஜெயசீலன்...