நீட் போராட்டம்!
* நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் எனும் கோரிக்கையையும்
* நீட் தேர்வு முறைகேடுகள் மீதான நாடாளுமன்ற விவாதம் எனும் கோரிக்கையையும்
* நீட் தேர்வு முறைகேடுகளின் விளைவாக தற்கொலை செய்துகொண்டோரின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் எனும் கோரிக்கையையும்
முன்வைத்து தொடங்கிய இப்போராட்டம் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று இந்தியா தழுவியதாக பரிணமித்து அரசு அடக்குமுறையை எதிர்கொண்டிருப்பதால் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தல் எனும் கோரிக்கையுடனும் தொடர்கிறது.
பனிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல தகிடுதத்தங்களையும் சூழ்ச்சிகளையும் மேற்கொண்டு இந்துத்துவப் பாசிச ஆட்சியை நடத்திவரும் மோடி-அமித் ஷா கும்பல் தமது ஆட்சி நிலையானது எனவும் எவரும் தமக்கு எதிராக எதையும் செய்யமுடியாது என்ற மமதைக்கு சவால் விடுவது சிறிதளவாவது சாத்தியமே என்றே இப்போராட்டம் பறை சாற்றுகிறது என்பதே இப்போராட்டம வழங்கும் உதாரணம்/படிப்பினை.
தெற்காசியாவில் இலங்கை, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற ஜென் ஸீயின் போராட்டம் இந்தியாவையும் எட்டிவிட்டது.
‘மக்கள் அநீதியை ஏற்பதில்லை’
‘மக்கள் என்றும் தோற்பதில்லை’
இதுதான் உலக வரலாறு; ஸ்பார்டகஸ் காலம் முதலே.
ஹிட்லர்/முஸோலியின் சீடர்களான மோடி-அமித் ஷா கும்பல் அவர்களின் முடிவையே இந்தியாவின் மக்கள் வழங்குவார்கள்.