புதுக்கோட்டை – வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலப்பதற்குக் காரணமான அதிமுகவை சேர்ந்த மு.தலைவர் முத்தையாவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே குற்றவாளியாக்கும் காவல்துறையின் அராஜகத்திற்கு வன்மையான கண்டனம்
தமிழ்நாடு முழுவதும் நிலவும் சாதிய தீண்டாமைப் பாகுபாடுகளை ஆய்வு செய்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். டிசம்பர் 20.12.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்தொட்டிக்குள் மலத்தைக் கலந்த கயவர்கள்...