கொரோனா தடுப்பு ஊரடங்கை அமுல்படுத்த துணை இராணுவ படை தேவையற்றது, வருகையை நிறுத்து! புலம்பெயர் தொழிலாளர் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்து! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் கூட்டறிக்கை – 30-3-2020.
கொரோனா கொள்ளைநோய் தடுப்பு நடவடிக்கைகளில் சமூக விலக்கம், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதை பெரும்பாலான மக்களும் ஏற்று சுயக்கட்டுப்பாட்டுடனும் எச்சரிக்கையுடனும் கடைபிடித்து வருகிறார்கள். மேலும் ஊரடங்கு அமல் படுத்தி விட்டு மக்களிடம் அத்தியாவசிய பொருட்களை தேவைகளை அரசு...