கண்டன ஆர்ப்பாட்டம் 01.06.19, காலை 10மணி, வள்ளுவர்கோட்டம், சென்னை. ஒருங்கிணைப்பு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம். ’முகிலன் உயிருடன் இருக்கிறாரா?’ – இப்போது நம் நெஞ்சை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இதுதான். பிப்ரவரி 15இரவில் இருந்து தோழர் முகிலன் காணவில்லை. சிபிசிஐடி விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. நாட்கள் நூறுகடந்துவிட்டன. ஆனால் இதுவரை ஒரு துப்பும் துலக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையத்தில் மதுரை மகால் தொடர்வண்டியில் ஏறி மதுரை செல்வது அவர் திட்டம். முதலில் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே போய்விட்டார் என்றுகாவல் துறை சொன்னது. பின்னர், இல்லை, இல்லை மீண்டும் உள்ளே வந்துவிட்டார் என்றது. மதுரை மஹால்இருக்கும் நடைமேடையில் அவர் நிற்பது சிசிடிவியில் தெரிகிறது என்றது சிபிசிஐடி. முகிலனின் செல்பேசியில் இருந்துகுறுஞ்செய்தி வெளியே போன போது செல்பேசி அலைவரிசை கூடுவாஞ்சேரியில் இருப்பதாக காட்டுகிறது. அதேநேரத்தில் தான் மதுரை மகால் ரயிலும் கூடுவாஞ்சேரியைக் கடக்கிறது என்றது சிபிசிஐடி. இதற்கு மேல் எந்த துப்பையும்திரட்ட முடியவில்லை சிபிசிஐடியால்! இப்போது முகிலன் அந்த ரயிலில் ஏறிவிட்டார் என்று ஊடகத்தில் செய்தி சொல்லி இருக்கிறது சிபிசிஐடி. மதுரைரயில் நிலையத்தில் இறங்கினாரா? இல்லையா? என்பதைகூட உறுதிபட விசாரணையில் கண்டுபிடிக்கமுடியவில்லையாம். விசாரணையின் நிலை இப்படி இருக்க முகிலன் மீதான அவதூறு பரப்பலில் தமிழக அரசு காட்டும்வேகம் அசர வைக்கிறது. அணு உலை எதிர்ப்பு, தாது மணல் கொள்ளை எதிர்ப்பு, ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு, கிரானைட் கொள்ளை எதிர்ப்புஎன சூழல் காப்பு போராட்டங்களின் முத்திரையோடு காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் மீதுஅவர் காணாமல் ஆக்கப்பட்டு நூறு நாட்கள் ஆன நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்றமுத்திரையைக் காவல் துறை பதிக்கிறது. பொதுத்தேர்தலின்...