தி நகர் போக்குவரத்து காவல்நிலையம் முற்றுகை ! 16 தோழர்கள் கைது, புழல் சிறையில் அடைப்பு!
![](https://peoplesfront.in/wp-content/uploads/2018/04/30441246_1588223847892777_7563111106705620992_n.jpg)
தி.நகர் போக்குவரத்து காவலர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தமிழ்நாடு இளைஞர் இயக்கத் தோழர்கள் கைது!
தி.நகரில் போக்குவரத்து காவல்துறையை கண்டித்து நடந்த முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கூடி முழக்கம் கூட எழுப்ப விடாமல் அடித்து இழுத்து வண்டியில் ஏற்றி விட்டது காவல் துறை. ஊடக நண்பர்களையும் அடித்து விரட்டியது. சிறையில் அடைக்கப்போவதாக கூறுகிறது காவல் துறை!
கைது தொடர்ச்சியாக
காட்சி ஊடகம், பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய காவலர்களை விரட்டிச் சென்று ஊடகவியலாளர்கள் மாம்பலம் காவல்நிலைய வாயிலில் மறியல்!