கருத்து

தமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்!

19 Jun 2019

“ உலகத்தில் எந்த நாட்டு வரலாற்றைப் பார்த்தாலும் கர்வப்பட ஏதுமில்லை. இன்னொருவனைப் பரிதவிக்கவிடுவது போரின் இரத்தத்தில் மிதப்பது அருவெறுப்புத் தரும் பேய்களின் கூத்து.. ஏழைகளைக் கொடுமைப் படுத்துதல் அவர்களைச் சுட்டுத் தின்னுதல்.. இதுதானே வரலாறு? யுத்த பூமி இல்லாத இடமேயில்லை இறந்தகாலம்...

தண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு!

18 Jun 2019

கடந்த மூன்று நான்கு மாதங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசப்பட்டுவந்த சென்னை மாநகர தண்ணீர் நெருக்கடி தற்போது கொதிநிலையை எட்டிவிட்டது. மாநில  உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியோ சென்னை மாநகரில் தண்ணீர் சிக்கல் என்பது திட்டமிட்டு பரப்பபடுகிற “வதந்தி” என ரிப்பன் கட்டிட...

இராஜராஜசோழனும் சாதி அமைப்பும்  சில விவாதப் புள்ளிகள்..

17 Jun 2019

இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல, அது இருண்ட காலம் என இயக்குநரும் தோழருமான பா.இரஞ்சித் சொன்னது பல்வேறு அரசியல் முகாம்களில் இருந்து பெரும்விவாதத்தைக் கிளப்பியுள்ளது.  மீண்டுமொரு முறை இராஜராஜ சோழன் கல்லறையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். பறையர்களிடம் நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும்...

இயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்!

12 Jun 2019

இராசராச சோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட பறையர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதை, தேவரடியார் முறை பலமானதையும் பற்றிப் பேசிய செய்தி தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருவதுடன், இரஞ்சித் மீது தாமே முன் வந்து வழக்குப் பதிந்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தூண்டுதலில்லாமல் இது போன்ற வழக்குப்...

கூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா?

12 Jun 2019

  புவிக்கோளத்தின் சூழல் அமைவிற்கும் மனித இனத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அணு உலைகள் இருப்பதை கடந்த கால விபத்துகள் போதுமான படிப்பினைகள் வழங்கியும் ஆளும் அரசுகள் அணுவுலை அமைக்கும் முயற்சிகளை கைவிடுவதாக தெரியவில்லை. 1500 நாட்களுக்கு மேல் தமிழகத்தில், கூடங்குளம் –...

நீட் தேர்வு – தற்கொலைகளுக்கு முடிவு எப்போது?

09 Jun 2019

இவ்வாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து வழக்கம் போல் தற்கொலைகளும் நடந்துவிட்டன. திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா, விழுப்புரம் மரக்காணத்தைச் சேர்ந்த மோனிஷா ஆகியோர் நீட் தேர்வில் வெற்றிப் பெறாததால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த ஆண்டு...

தருமபுரி இளவரசன் கொலையை மூடிமறைத்து தற்கொலை என அறிக்கை சமர்பித்த சிங்காரவேலர் ஆணையத்தை வன்மையாக கண்டிப்போம்

09 Jun 2019

ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வலியுறுத்துவோம். தருமபுரி இளவரசன் இறப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. திட்டமிட்ட கொலையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததால் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்திட பல இயக்கங்கள் வலுயுறுத்திவந்த நிலையில் தமிழக அரசின்...

உணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு! தொழிலாளர் துறையே தலையிடு!

03 Jun 2019

  அதிக வேகத்தில் வண்டியை ஓட்டினார்கள், மற்ற வாகன ஓட்டுனர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வண்டியை ஓட்டினார்கள் என்ற பெயரில் 616 உணவு வினியோக ஊழியர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை வழக்கு பதிந்துள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்றும்...

திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது சாலையோர வியாரிகளை அப்புறப்படுத்தக் கூடாதெனப் போராடியவர்களைக் குறிவைத்து அடாவடித்தனம் செய்த மதுக்கான் நிறுவனம்!  

03 Jun 2019

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட காலமாக தங்களது அன்றாட வாழ்வுக்காக சாலையோரம் வணிகம் செய்துவரும்  தரைக்கடை, மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள்,  சிறு வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் வேலையின் காவல்துறையின் உதவியுடன் எக்ஸ்பிரஸ் வேஸ் மதுக்கான் என்னும் தனியார் நிறுவனம்...

முகிலன் உயிருடன் இருக்கிறாரா? பழனிச்சாமி அரசே, முதலில் இதற்கு பதில் சொல்!

31 May 2019

கண்டன ஆர்ப்பாட்டம் 01.06.19, காலை 10மணி, வள்ளுவர்கோட்டம், சென்னை. ஒருங்கிணைப்பு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம். ’முகிலன் உயிருடன் இருக்கிறாரா?’ – இப்போது நம் நெஞ்சை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இதுதான். பிப்ரவரி 15இரவில் இருந்து தோழர் முகிலன் காணவில்லை. சிபிசிஐடி விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. நாட்கள் நூறுகடந்துவிட்டன. ஆனால் இதுவரை ஒரு துப்பும் துலக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையத்தில் மதுரை மகால் தொடர்வண்டியில் ஏறி மதுரை செல்வது அவர் திட்டம். முதலில் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே போய்விட்டார் என்றுகாவல் துறை சொன்னது. பின்னர், இல்லை, இல்லை மீண்டும் உள்ளே வந்துவிட்டார் என்றது. மதுரை மஹால்இருக்கும் நடைமேடையில் அவர் நிற்பது சிசிடிவியில் தெரிகிறது என்றது சிபிசிஐடி. முகிலனின் செல்பேசியில் இருந்துகுறுஞ்செய்தி வெளியே போன போது செல்பேசி அலைவரிசை கூடுவாஞ்சேரியில் இருப்பதாக காட்டுகிறது. அதேநேரத்தில் தான் மதுரை மகால் ரயிலும் கூடுவாஞ்சேரியைக் கடக்கிறது என்றது சிபிசிஐடி. இதற்கு மேல் எந்த துப்பையும்திரட்ட முடியவில்லை சிபிசிஐடியால்! இப்போது முகிலன் அந்த ரயிலில் ஏறிவிட்டார் என்று ஊடகத்தில் செய்தி சொல்லி இருக்கிறது சிபிசிஐடி.  மதுரைரயில் நிலையத்தில் இறங்கினாரா? இல்லையா? என்பதைகூட உறுதிபட விசாரணையில் கண்டுபிடிக்கமுடியவில்லையாம். விசாரணையின் நிலை இப்படி இருக்க முகிலன் மீதான அவதூறு பரப்பலில் தமிழக அரசு காட்டும்வேகம் அசர வைக்கிறது. அணு உலை எதிர்ப்பு, தாது மணல் கொள்ளை எதிர்ப்பு, ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு, கிரானைட் கொள்ளை எதிர்ப்புஎன சூழல் காப்பு போராட்டங்களின் முத்திரையோடு காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் மீதுஅவர் காணாமல் ஆக்கப்பட்டு நூறு நாட்கள் ஆன நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்றமுத்திரையைக் காவல் துறை பதிக்கிறது. பொதுத்தேர்தலின்...

1 56 57 58 59 60 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW