கொரோனா இரண்டாம் அலை – அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன் கொரோனா தடுப்பை மக்கள் இயக்கமாக்கு! தனியார் மருத்துவக் கட்டமைப்பைக் கையிலெடு! தடுப்பூசி தயாரிப்பில் பொதுத்துறையை ஈடுபடுத்து! போர்க்கால அடிப்படையில் பொது சுகாதாரத்துறையைப் பலப்படுத்து!
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் செய்தியறிக்கை திமுக தலைமையிலான தமிழக அரசு கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வதற்கு பல்வேறு நிர்வாக மாற்றங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. மருத்துவ மாணவர்களைக் களமிறக்கியமை, கட்டளை மையம் அமைத்தமை, ஒப்பந்த செவிலியர்களில் 1212 பேரை நிரந்தரமாக்கியமை,...