சத்தியவாணி முத்து நகர் பூர்வகுடி மக்கள் வெளியேற்றம் – எதிர்த்து நின்ற தோழர் இசையரசு மற்றும் DYFI தோழர்கள் மீது காவல்துறை தாக்குதல் ! – கண்டனம்
அண்ணாசாலையில் இருக்கும் சத்தியவாணி முத்து நகர் மக்களிடம், ”நாளைக்கு உங்கள் வீடுகள் இடிக்கப்பட உள்ளன” என்ற செய்தியை காவல்துறையும் மாநகராட்சி அதிகாரிகளும் தெரிவித்தன. அரையாண்டு விடுமுறைக் காலமிது. இந்த கல்வியாண்டு முடிய இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்றன. இங்கிருந்து 26 கி.மீ...