ஈழத் தமிழர் தொடர்பில் நடக்கும் பன்னாட்டு நிகழ்வுகளை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கவனிப்பதில்லையா? அல்லது தெரிந்தே செயலற்று இருக்கிறதா?
உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் கெரியில் கொல்லப்பட்ட உழவர்களின் குடும்பங்களை சந்தித்த பின், அந்த மாநிலத்தின் காங்கிரசு தலைவர் பிரியங்கா காந்தி, “ அவர்கள் நிவாரணம் வேண்டாம், நீதி வேண்டும் என்கிறார்கள்(நியாய் என்று இந்தியில்)” என்று உணர்வுப்பூர்வமாக சொன்னார். ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை 70,000...