விருத்தாசலத்தில் கீழ்வெண்மணி நினைவுநாள் நிகழ்வு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் கீழ்வெண்மணி நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்வில் தமிழ் தேச மக்கள் முன்னணியின் கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்வில் மக்கள் அதிகாரம் அசோக் குமார், முருகானந்தம், வழக்கறிஞர் மோகன்ராஜ், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கோகுல் கிறிஸ்டின், சிபிஎம்எல் மக்கள் விடுதலை ராஜசேகர், முருகன்குடி பழனிவேல் மற்றும் பலர் பங்கெடுத்து வீரவணக்கம் செலுத்தினர்.