தடையை நீக்க கோரி துண்டரிக்கை கொடுத்தவர்கள் கைது
பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை நீக்க வலியுறுத்தி திருச்சியில் துண்டறிக்கை கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கென்னடி உள்ளிட்ட சுமார் 50 பேரை காவல் துறை தளைப்படுத்தியுள்ளமைக்கு கண்டனம்.
தடையை நீக்கக் கோரும் உரிமை அரசமைப்புச் சட்டம் தந்திருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். பாசிச எதிர்ப்பில் முதல் நிபந்தனையே சனநாயகத்தின் பக்கம் நிற்பதாகும்.
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு தடுத்து வைத்திருப்போரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.